Tuesday, August 20, 2013

சென்னையில் செப்டம்பர் 9-ந் தேதி நடிகர் பரத் காதல் திருமணம்

சங்கர் டைரக்டு செய்த ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத். பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த ‘காதல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும். பரத்தும், துபாயில் பல் டாக்டராக இருக்கும் ஜெஸ்லி என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
இவர்கள் காதலை இரண்டு பேர்களின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பரத்-ஜெஸ்லி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 14-ந்தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் பரத் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
“ஜெஸ்லியை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தற்செயலாக சந்தித்தேன். 2 பேரும் நட்புடன் பழக ஆரம்பித்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. 2 பேரும் காதலை பகிர்ந்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.
எங்கள் திருமணத்திற்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் நானும், ஜெஸ்லியும் திருமணம் செய்து கொள்கிறோம். ஜெஸ்லி பி.டி.எஸ். படித்தவர்.
துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் எம்.டி.எஸ். படிக்க முடிவு செய்திருக்கிறார்.”
இவ்வாறு பரத் கூறினார்.

No comments:

Post a Comment