Friday, August 2, 2013

தலைவாவுக்கு யு சான்றிதழ்: ரிவைசிங் கமிட்டி வழங்கியது



விஜய் நடித்துள்ள தலைவா படம் வருகிற 9ந் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தலைவா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கு யுஏ சான்றிதழ் கொடுத்தனர்.
படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு கூறியது. இதனால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார். அவர்கள் படத்தை பார்த்து விட்டு யு சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டனர். ஆனாலும் ஒரு சில காட்சிளை நீக்க வேண்டும். சில காட்சிகளின் நீளத்தை குறைக்க வேண்டும் என்றனர்.
இதனை தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து படம் ரம்ஜானுக்கு ரிலீசாகும் சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.


டி.ஆர் பாட்டுக்கு பவர்ஸ்டார் குத்தாட்டம்




இராமநாராயணன் இயக்கத்தில் பவர்ஸ்டார் நடித்து வந்த படம் ஆர்யா சூர்யா. ஆனால் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பவர்ஸ்டாரை மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது. அதனால் முமைத்கானுடன் இணைந்து அவர் ஆட வேண்டிய ஒரு குத்துப்பாட்டை தானே பாடி, முமைத்கானுடன் அதிரடி ஆட்டமும் போட்டார் டி.ராஜேந்தர்.
முன்னதாக, கோலிசோடா என்ற படத்தில் டி.ஆர் பாடியுள்ள குத்துப்பாட்டுக்கு பவர்ஸ்டாரே நடனமாடியுள்ளார். அடங்கொய்யாலே நீ பொய்யாலே -என்று தொடங்கும் அந்த பாடலில் ஆர்யாசூர்யா படத்தில் நடிப்பதற்கு முன்பே நடித்து முடித்து விட்டாராம் பவர்ஸ்டார். ஒருவேளை அப்படி அவர் அந்த படத்திலிருந்தும் பாதியிலேயே போயிருந்தால் அந்த குத்துப்பாட்டுக்கு ஆடும் வாய்ப்பும் டி.ஆருக்குத்தான் கிடைத்திருக்குமாம்.
இதுதவிர, இப்போது யாராவது இயக்குனர்கள் அயிட்டம் நடிகைகளைப்போல் அயிட்டம் நடிகர்கள் வேண்டும் என்று யோசித்தாலும் டி.ஆர்தான் அவர்கள் மைண்டில் வந்து நிற்கிறாராம். அதனால், இப்படியே போனால் இன்னும் சிலகாலத்தில் நம்பர்-ஒன் அயிட்டம் நடிகராக டி.ஆர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

கார்த்திகாவின் பாலிவுட் கனவு


மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, பிறந்து வளர்ந்த தெல்லாமே மும்பையில் தான். அதனால், மகளை பாலிவுட்டில் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதுதான், ராதாவின் ஆசையாக இருந்தது.
ஆனால், அவரது தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று, தென் மாநில சினிமா களத்தில் இறக்கிவிடப்பட்டார் கார்த்திகா. இந்நிலையில், தற்போது மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் கார்த்திகா, “அன்னக்கொடி படத்தில்கதைக்கேற்ப, கவர்ச்சியாகவும் நடித்தார்.
இதையடுத்து, “இனி கிளாமர் விஷயத்தில் அளவு கோல் வைக்கப்போவதில்லை என்று, தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் கூறி வரும் கார்த்திகா, மீண்டும் பாலிவுட் கோதாவில் இறங்கவும்,நேரம் பார்த்து வருகிறாராம். இந்தியில் நடித்து மார்க்கெட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான், கார்த்திகாவின் பெருங்கனவாம்.

அஜீத்துடன் நயன்தாராவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியுள்ளதாம்!



விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு வருடமாக படத்துக்கு தலைப்பு வைக்காத விஷ்ணுவர்தன் சமீபத்தில்தான் ஆரம்பம் என்று அறிவித்தார். அதோடு, இப்படம் ஏற்கனவே அஜீத்தைக்கொண்டு நான் இயக்கிய பில்லா படத்தை விடவும் படு வேகமான கதை. அதனால் இப்படத்தில் புதுமையான மிரட்டலான அஜீத்தை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அதே பில்லா படத்தில் அஜீத்துடன் பிகினி உடையணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நயன்தாரா. அந்த படத்திற்கு பிறகுதான் பரபரப்பான நடிகையானார். அவர் இந்த ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தது பற்றி கூறும்போது, ‘ஏற்கனவே அஜீத்துடன் நடித்த அனுபவம் இருப்பதால் எந்த மாதிரி பார்பாமென்ஸ் பண்ணினால் அவருடன் ஒத்துப்போக முடியும் என்பதை புரிந்து அதற்கேற்ப நடித்தேன். அதனால் காதல் காட்சிகளில் எங்களுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரி இந்த படத்தில் இருக்கும்,’ என்கிறார்.
மேலும், ‘செகண்ட் இன்னிங்சில் நான் நடித்து வெளியாகப்போகிற முதல் படம் ஆரம்பம். இப்படம் பார்க்கிற ரசிகர்களுக்கு எனது நடிப்பு புதிய அனுபவமாக இருக்கும். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றி இயல்பாக நடித்திருக்கிறேன். இதுமட்டுமின்றி அடுத்தடுத்து நான் நடித்துள்ள எல்லா படங்களிலுமே நயன்தாராவாக தெரியமாட்டேன். அந்தந்த படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமாகவே நான் தெரிவேன்,’ என்கிறார் நயன்தாரா.

3 மொழிகளில் சலீம்


இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்துக்கு பிறகு தற்போது நடித்து வரும் படம் சலீம். நிர்மல்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா நடிக்க சில முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
யாரும் நடிக்க முன்வரவில்லை. அதனால் தெலுங்கில் அறிமுகமாகி வளர்ந்து வரும் அக்ஷா என்ற நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்.
இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “ஹீரோயினா நடிக்க சில டாப் ஹீரோயின்களுடன் பேச்சு நடந்தது உண்மை. கால்ஷீட் பிரச்சினையால் யாரும் நடிக்கவில்லை. அவர்கள் நேரம் வரை காத்திருக்க எங்களால் முடியவில்லை.
அதனால் அக்ஷா நடிக்கிறார். கதை இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதால் நண்பர்கள் மூன்று மொழிகளில் வெளியிடலாம் என்று யோசனை சொன்னார்கள். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது” என்கிறார் இயக்குனர் நிர்மல் குமார்.

Thursday, August 1, 2013

விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு


“விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், “முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம்.
நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், “விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன்.
“விஸ்வரூபம் படத்தின் கதையை ரெடி செய்தபோதே, இரண்டு பாகங்களாக தான், ரெடி செய்தேன். முதல் பாகம் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு, அதன் தொடர்ச்சியான, முழு கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதனால் தான், இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்கிறார்.

மருமகன் தனுஷின் மரியானை பார்த்து ரசித்து வாழ்த்திய ரஜினி!

ராணாவுக்கு பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி, பல மாதங்களாக போயஸ் கார்டன் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். அப்போது திரையுலகிற்கும் அவருக்குமிடையே இடைவெளி அதிகமானது போல் ரஜினி பீல் பண்ணினாராம். அதனால், அவ்வப்போது வெளியாகும் படங்களை அவர் உடனுக்குடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது வீட்டை ஒட்டியிருந்த இடத்தில் ஒரு க்யூப் தியேட்டரை உருவாக்கினார்கள்.
அதனால், சில படங்களைப்பார்ப்பதற்காக பிரிவியூ தியேட்டர்களுக்கு வந்து சென்று கொண்டிருந்த ரஜினி, அதையடுத்து வெளியில் வருவதை நிறுத்தி விட்டு, தனது வீட்டு தியேட்டரிலேயே படங்களை பார்க்கத் தொடங்கினார். வேண்டப்பட்டவர்கள் படம் பார்க்க அழைத்தால்கூட பிரிண்டை கொடுங்கள் நான் வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விடுகிறார்.
கோச்சடையானில் நடித்த பிறகு இப்போது அந்த தியேட்டரில்தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட வரும் ரஜினி, சமீபத்தில் தனது மருமகன் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறார். முன்பை விட தனுஷின் நடிப்பில் தெரிந்த முதிர்ச்சியை கண்டு வியந்த ரஜினி, உடனடியாக அவருக்கு போன் போட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

ஒரு பாடலுக்கு 5 இசையமைப்பாளர்கள்! யுவனின் ஸ்பெஷல் பிரியாணி சாங்



தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணி படத்தில் பல்வேறு ஆச்சரியங்களை தந்து கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக வெங்கட்பிரபுவும் ஜதி சொல்லியிருக்கிறார்.
இதுதவிர, இந்த படத்தில் 4 இசையமைப்பாளர்கள்(யுவனையும் சேர்த்து 5பேர்) இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி. இமான், எஸ்.எஸ். தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர்.
இதனால், ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் பாடலை கேட்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும், தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணியின் ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர். ரஹ்மானை அழைக்க திட்டமிட்டுள்ளார் யுவன்.பிரியாணி படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடித்து விட்ட நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி பாடல் வெளியீட்டு விழாவும், செம்டம்பர் 6ம் தேதி படத்தையும் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தி பயிலும் தனுஷ்


இந்தியில் தனுஷ் நடித்த, “ராஞ்சனா படம் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவிலும் சில திரையரங்குகளில் ரிலீசானது.
ஒரேயொரு இந்தி படத்தில் நடித்ததின் மூலம், தனுஷின் வியாபார வட்டம் பரந்து, விரிந்து விட்டது. அதே படம் தமிழில், “அம்பிகாபதி என்ற பெயரில், “டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே, பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படத்தை தூக்கி விட்டனர்.
அதேபோல், நேரடி தமிழ்ப்படமான, “மரியானும் தனுஷûக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், தனக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த, இந்தி சினிமாவின் மீது தனுஷûக்கு, கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தீவிரமாக இந்தியும் பயின்று வருகிறாராம்.

இங்கிலாந்தில் வசூலை குவிக்கும் சிங்கம் 2


நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் இங்கிலாந்திலும் வசூலை குவித்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகளில் சிங்கம் 2 நான்காவது வாரமாக ஓடி கொண்டு இருக்கிறது.
சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல் 1,88,972 பவுண்ட்கள். அதாவது ரூபாயின் மதிப்பில் ரூ. 1.73 கோடி. அதே போல, நடிகர் தனுஷ் நடித்த மரியான் படமும் யு.கே.வில் 2வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
சென்ற வாரம் பட்டத்து யானை, சொன்னா புரியாது படங்களும் அங்கு வெளியாகியுள்ளன.

ஆசையாக வளர்த்த நாய்க்குட்டிகளை தத்துக்கொடுத்தார் த்ரிஷா!



நடிகை த்ரிஷா நாய்க்குட்டிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். பெரும்பாலான நடிகைகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் நாய்களை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். ஆனால், த்ரிஷாவோ நம்ம ஊரில் உள்ள நாய்களையே வளர்த்து வருகிறார். அதோடு, தெருவில் எங்காவது நாய்கள் அனாதைகளாக திரிந்தால் அவற்றை பிராணிகள் நல வாரியத்திடம் ஒப்படைப்பார். அவருக்கு சிகிச்சையும் கொடுப்பார்.
மேலும், பிராணிகள் நல வாரியத்துக்கு நிறைய நன்கொடைகளும் வழங்கி வருகிறார். இதனால், த்ரிஷாவை நல வாரியத்தின் தூதுவராக நியமித்துள்ளனர். முன்பெல்லாம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் எப்போதாவது ஓய்வு கிடைக்கும்போதுதான் பிராணிகள் நல வாரியத்துக்கு விசிட் அடிப்பார் த்ரிஷா. ஆனால், இப்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடிக்கடி அங்கு செல்கிறாராம்.
இந்த நிலையில், தனது வீட்டில் வளர்த்து வந்த 25க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை தத்து கொடுக்கும் முகாம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தினார் த்ரிஷா. அப்போது, த்ரிஷாவினால் வளர்க்கப்பட்ட நாய்கள் என்பதோடு அவரது கையினாலேயே வாங்குகிறோம் என்பதால் பலர் போட்டி போட்டு அவரிடமிருந்து நாய்களை தத்து எடுத்து சென்றனர். அந்த நாய்கள் ஒவ்வொன்றுக்கும் த்ரிஷாவையே பெயர் வைக்கும்படியும் சிலர் கேட்டுக்கொண்டார்கள்.

Wednesday, July 31, 2013

நல்லவேளை... எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே! - வதந்திகள் குறித்து கனகா கமெண்ட்!





சென்னை: நல்லவேளை... என்னைப் பத்தி வதந்தி பரப்பினவங்க எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே, என கமெண்ட் அடித்து சிரித்தார் நடிகை கனகா. 
 
தென் இந்திய மீடியாவை நேற்று முழுக்க கலக்கியது நடிகை கனகா குறித்த செய்திகள்தான். 
 
கனகா புற்றுநோயால் உருக்குலைந்து போய், ஆலப்புழாவில் அநாதைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கடந்த சில தினங்களாக பரவிய வதந்தி, நேற்று உச்சத்துக்குப் போய் அவர் கேரளாவிலேயே இறந்துவிட்டதாய் பரபரப்பைக் கிளப்பியது.

நிருபர்களிடம் பேசிய அவர், "நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை. சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு புற்றுநோய் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்

இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார். இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார். இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள முடிகிறது.

 
என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகிறார். அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை. எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை. அவர் ஒரு பணப்பேய். அவரால்தான் எனக்கு ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காமலே போய்விட்டது. அதனால்தான் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழி இவற்றுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட இவை எவ்வளவோ மேல். என் உதவிக்கு என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.எக்காரணத்தைக்கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன்.
சில நடிகர், நடிகைகளிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஏனோ என்னிடம் பேச விரும்பவில்லை. நானும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எனக்குப் பிடித்த உலகில் நான் வசிக்கிறேன்

 
எனக்கு எந்த பயமும் இல்லை. இவ்வளவு பெரிய வீ்ட்டில் வசிக்க பயமாக இருக்கிறதா என்று கேட்கிறீர்களே.. யாருக்காக எதற்காக பயப்பட வேண்டும். திருடனுக்கா... பேய் பிசாசுகளுக்கா... எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுங்கி ஈசிஆர் ரோட்டில் பங்களா கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். நான் பணக்காரி. ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். நான் எதற்கு பயப்பட வேண்டும்.

என் திருமணம் பற்றிப் பேச வேண்டாம். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதுதான். திருமணம் பற்றி பேசவேண்டாம் என என் வக்கீல் சொல்லியிருக்கிறார். திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் என்று கட்டாயமில்லையே. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை இல்லாமலும் கூட வாழத்தானே செய்கிறார்கள்!

நெக்ஸ்ட் ஒருவருஷம் ரெஸ்ட்… அஜீத் அதிரடி


படத்தோட பேரு என்று ஒருவருடம் பேச வைத்தவர் அஜீத், இதோ ஆரம்பம் என்று அறிவித்தாகிவிட்டது. படப்பிடிப்பிற்காக ஓடிக்கொண்டே இருந்ததில் கால்வலி கவனிக்க கூட நேரமில்லை. இப்போது பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஜீத். 
ஆரம்பம் படப்பிடிப்பில் சின்னச் சின்னதாக ஆக்ஸிடென்ட் வேறு அஜீத்தை அசத்திவிட்டது. 
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் பரபரப்பாக சுவிட்சர்லாந்து பயணம் என கடந்த பல மாதங்களாகவே பயங்கர பிஸி. எனவே ஷாலினி, மகளின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுத்து கால்வலி பிரச்சினையை சரிசெய்யப் போவதாக கூறியுள்ளார். வார இதழ் ஒன்றிர்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவாவின் படத்திற்காக சுவிட்சர்லாந்து பயணம் முடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறார். வெயில் மட்டுமல்ல பனியும் கூட நிறத்தை மாற்றிவிடும் லேசாக கறுத்துப் போயிட்டேன்ல. சென்னை வந்துட்டேன்ல இனி கலர் வந்திடும் என்று கூலாக சொன்னார் அஜீத்.
ஆரம்பம்' படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரும்.

நாகிரெட்டி தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கும் படமும் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து விட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 
இந்த படங்களுக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு ரெஸ்ட்தான். கால்வலி பிரச்சினையை சரி செய்யணுமே!. ஒன்றரை வருடமா அந்த வலியோடவே நடமாடிட்டு இருக்கேன்.

 

Actress Kanaga Interview About Here Death & Cancer


Tuesday, July 30, 2013

தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா


 
சென்னை: கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் தேவதாசிகள் குறித்து பேசிய நடிகை சொர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
சென்னை தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை இரு தினங்களுக்கு முன்னர் கருத்தரங்கம் ஒன்று நடத்தியது. முதலில் "தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்" (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு, 
 
பின்னர் பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக "பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்" (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா, ‘கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர்' என கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
மேலும், ‘தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்றும் விமர்சித்துள்ளார். அத்தோடு, காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி 'தேவதாசி முறை ஒழிப்பு'க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் தனது பேச்சில் நினைவு கூர்ந்துள்ளார் 
 
ஸ்வர்ணமால்யா. தேவதாசி முறை மூலம் பெண்களின் கண்ணியம் குறித்து தவறாக பேசியதாக அவர் மீது பெண்ணியவாதிகள் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!




 
நடிகை நக்மா மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் ஏற்கவிருப்பது அம்மா வேடம். தொன்னூறுகளில் தமிழ், தெலுங்கில் முதல் நிலை நடிகையாக வலம் வந்தவர் நக்மா. 
 
ரஜினிக்கு நாயகியாக பாட்ஷாவில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். சினிமா நடனத்தில் சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற நக்மாவுக்கு, சரத்குமார் உருவில் வந்தது சோதனை. இருவரும் அரவிந்தன், ஜானகிராமன், ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்தனர்.
 
 திடீரென இருவருக்கும் பிரிவு வர, நக்மா சென்னையைக் காலிசெய்து விட்டு மும்பைக்கே போய்விட்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த படம் சிட்டிசன். ஆனாலும் தமிழில் தொடரவில்லை. 
 
போஜ்புரி படங்களில் பிஸியாக இருந்தார். தங்கை ஜோதிகாவுக்கு திருமணமான பிறகு, சினிமாவைவிட்டு ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். 
 
தர்மா தேஜா இயக்கும் புதிய படத்தில் இளம் அம்மா வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கிய வேடம். கதையை யோசிக்கும்போதே இந்த வேடத்துக்கு நக்மாதான் என்று முடிவு செய்துவிட்டேன், என்று இயக்குநர் தேஜா கூறினார்.
 
 நக்மா கடைசியாக நடித்த தெலுங்குப் படம் அல்லாரி ராமுடு. 2002-ல் வெளியானது.

சித்தார்த் வரலியே... - வருத்தத்தில் சமந்தா


 
நான் விருது வாங்கியதைப் பார்க்க என் நெருங்கிய நண்பர் சித்தார்த் வராதது வருத்தத்தைத் தந்தது என்று சமந்தா கூறியுள்ளார். 
 
சித்தார்த்தும் சமந்தாவும் கிட்டத்தட்ட கணவன் மனைவி எனும் அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் எங்கும் இணைந்தே காணப்படுகிறார்கள். குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில்தான் சமந்தாவுக்கு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சமந்தாவுக்கு இரு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. விருது கிடைத்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், அந்த தருணத்தை நேரில் வந்து தனது காதலர் பார்க்கவில்லையே என்ற வருத்தம் சமந்தாவுக்கு நிறைய இருந்தது. 
 
அதை அவர் ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய இரு படங்களிலும் சிறப்பான நடிப்பைக் காட்ட முடிந்தது. 
 
எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் விருது வாங்கிய விழாவில் சித்தார்த் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்று ட்விட்டரில் குறிப்பிட்டது பற்றி பலரும் பேசுகின்றனர்.
 
 நான் எல்லோரிடமும் பாசமாக இருக்கிறேன். சித்தார்த் என் நெருங்கிய நண்பர். குடும்பத்தில் ஒருவர். எனவேதான் விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்ப்பார்த்தேன்," என்றார்.

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த \

 
 
சென்னை: சிம்பு படத்தில் நடிக்கும் முன்பு ஹன்சிகாவை சிலர் எச்சரித்துள்ளனர். ஹன்சிகா வாலு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு அவரிடம் சிம்புவை பற்றி சிலர் எச்சரித்துள்ளார்களாம். 
 
ஷூட்டிங் துவங்கிய பிறகு கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்கிறார்களே அது ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவை பற்றி ஹன்சிகாவிடம் ஆஹா, ஓஹோ என்று பேசியுள்ளார்களாம். இதை கேட்டு ஹன்சிகா சிம்புவிடம் மனதை பறிகொடுத்துவிட்டாராம்.
 
 வழக்கமான காதல் ஜோடிகள் போன்று அவர்களும் நாங்கள் காதலர்கள் இல்லை நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீர் என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், திருமணமும் செய்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்தனர். 
 
திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழப் போகிறார்களாம்.

மரியானை கேட்டு வாங்கிப் பார்த்த ரஜினி


சென்னை: ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள திரையரங்கில் மருமகன் தனுஷ் நடித்த மரியான் படத்தை பார்த்துள்ளார். படங்களை விளம்பரப்படுத்த விரும்புவோர் அதை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்று அறிவித்துவிடுவார்கள். 
 
அடடா ரஜினி பாராட்டியுள்ளாராமே என்று அந்த படத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். இப்படி பலர் தங்களின் படங்களை விளம்பரப்படுத்துவதை பார்த்த ரஜினி படம் பார்ப்பதை தவிர்த்தார். 
 
 ரஜினி தான் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு க்யூப் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். 
 
இந்நிலையில் அவர் ரவிச்சந்திரனை அழைத்து நீங்கள் தயாரித்த மரியான் படத்தை கொஞ்சம் போட்டுக் காட்டுங்களேன் என்று கூறியுள்ளார்.
 
 ரஜினியே கேட்டுவிட்டார் என்று மரியான் பிரிண்ட் ஒன்றை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்துள்ளார். அதை தனது க்யூப் தொழில்நுட்ப திரையரங்கில் போட்டு பார்த்து ரசித்துள்ளார் ரஜினி. 
 
மரியான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ், இசையமைத்துள்ளதோ கோச்சடையான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கிசுகிசுவில் இருந்து தப்பிய காஜல்அகர்வால்!


ஆந்திராவைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காஜல்அகர்வால் காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்தன. ஆனால் இந்த செய்திக்கு காஜல்அகர்வால் தரப்பில் இருந்து நேரடியான விருப்போ, மறுப்போ வெளியாகவில்லை. அதனால் விசயம் நாளுக்குநாள் ஊதி பெருசாகி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காஜலின் நல்ல நேரம், அந்த நேரம் பார்த்து, ஹன்சிகா, சிம்புவுடனான காதலை ஓப்பனாக அறிவித்தார். அதனால் காஜலின் மீதிருந்த மீடியா கண்கள் அப்படியே ஹன்சிகா பக்கம் திரும்பின. முன்னதாக சித்தார்த்-சமந்தா காதல் கதை இன்னொரு ட்ரேக்கில் ஓடிக்கொண்டிருப்பது போல், அமலாபால் மற்றும் ஆஸ்தான டைரக்டர் விஜய்யுடனான காதல், லட்சுமிராய் தொழிலபதிருடன் கொண்டிருக்கும் ரகசிய காதல் என பல ட்ரேக்குகள் இப்போது மீடியாக்களின் கவனத்துக்கு வந்து விட்டன.
அதனால், மேற்படி ஜோடிகளின் திருமணம் நடக்குமா? இல்லை வழக்கமாக சில ஆண்டுகள் ஜாலிக்காக காதலித்து விட்டு பிரிந்து விடுவார்களா? என்பது போன்ற புலனாய்வில் சில முக்கிய மீடியாக்கள் இறங்கி விட்டன. இதனால் ஒருவழியாக காதல் கிசுகிசுவில் இருந்து தப்பிய காஜல்அகர்வால், இப்போது ஐதராபாத்துக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார். தமிழ்ப்படங்களில் மட்டுமே தற்போதைக்கு நடித்து வரும் அவர், மும்பையிலிருந்து நேராக சென்னைக்கு வருபவர், இங்கிருந்து அப்படியே மும்பைக்கு மீணடும் பறந்து விடுகிறாராம். இடையினில் எங்கும் அவர் லேண்டாவதில்லையாம். காதல் செய்திகளில் இருந்து முழுசுமாக எஸ்கேப்பாகத்தான் ஐதராபாத்தை இப்படி தற்காலிகமாக ஓரஙகட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்

அஞ்சலி வருகையால் டாப்சி கலக்கம்





சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், கோடம்பாக்கமே வேண்டாமென்று, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலியை, மீண்டும் தமிழுக்கு வருமாறு சில இயக்குனர்கள் அழைத்தபோது, இப்போதைக்கு வருவதாக இல்லை என்று மறுத்து வந்தார்.
ஆனால், “முனி படத்தின், 3ம் பாகமான, “கங்கா படத்தின் தெலுங்கு பதிப்புக்காக, முதலில் அஞ்சலியை புக் பண்ணியிருந்த ராகவா லாரன்ஸ், இப்போது தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளிலுமே, அஞ்சலியை புக் செய்து விட்டார். இப்படத்தின் இரண்டாவது பகுதியில், அஞ்சலி நடிக்கும் கேரக்டர், மிக அதிரடியாக இடம் பெறுகிறது.
லாரன்ஸ் படத்தின் மூலம், மீண்டும், அஞ்சலி தமிழுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஆனால், இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக, ஏற்கனவே, கமிட்டாகியுள்ள டாப்சியோ, அஞ்சலி படத்தில் இணைக்கப்பட்டிருப்பதால், தன்னை டம்மியாக்கி விடுவார்களோ என்று குழம்பிப்போய்இருக்கிறார்.

எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி


சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார். 

நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது. 

இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது. இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர்.

 சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும்

ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது. 


யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார்.




Monday, July 29, 2013

அமெரிக்கா: இந்திய சுதந்திர தின விழாப் பேரணிக்கு ஹசாரே, வித்யா பாலனுக்கு அழைப்பு



அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 43 வருடங்களாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவின் சுதந்திர தின விழாப் பேரணிகளும், கொண்டாட்டங்களும் அமெரிக்காவிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன.
இந்த வருட சுதந்திர தின விழாப் பேரணி மன்ஹாட்டனில் வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது வெளியில்பெரிய அளவில் நடைபெறும் பேரணி இதுவாகும். மேலும், இந்த நிகழ்ச்சி, இந்த அமைப்பினர் நடத்தும் 33ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹசாரேவும், இந்தி நடிகை வித்யா பாலனும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இந்தியாவின் முன்னாள் ராணுவத்தலைமை அதிகாரியான வி.கே.சிங்கும், ஆன்டிகுவா, பார்படா நாட்டின் பிரதமர் பால்ட்வின் ஸ்பென்சரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர் என்று இந்த அமைப்பின் தலைவர் சஞ்சய் அமின் தெரிவித்தார். இவர்கள் தவிர, தமிழ்த் திரைப்படநடிகரும், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவரும், தமிழக சட்டசபை உறுப்பினரும் ஆன சரத்குமார் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் பேரணியில் தலைவர்களாகப் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், மன்ஹாட்டனின் அணிவகுப்புப் பாதை அருகே 10அடிக்கு 80 அடி அளவில் டெல்லி செங்கோட்டையின் மாதிரி ஒன்று நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதா ரகுநாதனுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது






மியூசிக் அகாடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்த ஆண்டுக்கான, அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கவுள்ள அகாடமியின் 87-வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் 1-ந்தேதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில், சுதா ரகுநாதனுக்கு, ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படுகிறது.
மேலும், இந்த விழாவில், அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக்கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு, ஜனவரி மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ள நாட்டிய விழாவில் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை மியூசிக் அகாடமி தலைவர் என்.ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளா

விஜய் நடிக்கும் தலைவா படத்திற்கு சிக்கல்



சமீபகாலமாக விஜய் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் தலைப்பு பிரச்சினையில் சிக்கி, வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இறுதியாக படம் வெளியாகி, சூப்பர் ஹிட்டனாது.
‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவா’ படத்திற்கும் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர். யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டால் படத்திற்கு வரி விலக்கு கிடைக்காது என்பதால், படக்குழுவினர் தங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
ஆனால் தணிக்கைக் குழுவினர் இதனை ஏற்கவில்லை. மாறாக, சில காட்சிகளை நீக்கினால் ‘யு’ சான்றிதழ் தருவதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கும் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து மறு தணிக்கைக்கு படத்தை அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.
‘தலைவா’ படத்தில் விஜய்-க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும், சந்தானம், சத்யராஜ், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ், அடுத்த மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன: தனுஷ்


தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழில் இப்படம் அம்பிகாபதி என்ற பெயரில் வந்தது. தனுஷ் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, இந்தியில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. விரைவில் நான் நடிக்கப் போகும் இந்திப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தமிழில் சற்குணம், கே.வி. ஆனந்த் இயக்கும் படங்களில் நடிக்கிறேன் என்றார். சற்குணம் படமான நையாண்டியில் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. விரைவில் இந்த பாடலை தனுஷ் முடித்து கொடுக்கிறார். செப்டம்பர் அல்லது அக்டோபரில் படம் ரிலீசாகிறது. தற்போது நண்பர்களுடன் தனுஷ் லண்டன் சென்றுள்ளார். அங்கு நேற்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இதில் பங்கேற்றனர். பிறந்த நாளையொட்டி தனுஷ் பேஸ் புக்கில் சேர்ந்துள்ளார். சமூக வலைத் தளங்கள் என்னைப் பற்றிய விஷயங்களை நேரடியாக ரசிகர்களுக்கு கொண்டு செல்கின்றன என்றார். பேஸ் புக்கில் தனது புகைபடங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், கருத்துக்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் போன்றவற்றை போட்டு வைக்க முடிவு செய்துள்ளார்.

மாதவன் ஆங்கில படத்தில் நடிக்கிறார்.



மாதவன் ஆங்கில படத்தில் நடிக்கிறார். 1968–ல் வெளியான நைட்ஆப் லிவ்விங்டெட் என்ற ஹாலிவுட் படம் 3டியில் ரீமேக் ஆகிறது. இதில் டேனியல் ஹாரிஸ், டாம்ஸைஸ்மோர், டானிடாட், சுலோனா டால், ஷாராஹெபில் போன்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் மாதவனும் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார். ஜமிதியா டிசோட்டோ இயக்குகிறார். திகில் படமாக உருவாகிறது. இதில் நடிப்பது குறித்து மாதவன் கூறும்போது, நைட் ஆப் லிவ்விங்டெட் ஹாலிவுட் படத்தின் 3 டி ரீமேக்கில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹாலிவுட்டில் பெரிய ஹிட் படங்கள் எடுத்த கம்பெனி இப்படத்தை தயாரிக்கிறது. என்னை இந்த படத்தில் நடிக்க தேர்வு செய்ததை பெருமையாக கருகிறேன் என்றார்.

சுந்தர்.சி.யுடன் ஜோடி சேரும் நயன்தாரா?


தன்னுடைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் அவதாரமும் எடுத்து, அதில் வெற்றியும் கண்டவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் இயக்குனரானார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன.
இதையடுத்து, அடுத்த படவேலைகளில் பிசியாகிவிட்டார் சுந்தர்.சி. தமிழ் சினிமாவில் தற்போது காமெடி பார்முலாதான் டிரெண்ட் என்பதால் இளம் முன்னணி நாயகர்கள் இவருடைய இயக்கத்தில் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், தன்னுடைய அடுத்த படத்தில் சுந்தர்.சி.யே நாயகனாக நடிக்கப் போகிறாராம். இவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கப் போகிறாராம்.
நயன்தாரா, ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிப்பதற்கே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார். அப்படியென்றால், சுந்தர்.சி.யுடன் நடிக்க எவ்வளவு கேட்பாரோ? என்ற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளனர். ஆனால், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து நடிக்க வைக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சுந்தர்.சி.

Pattathu Yaanai Review | Kashayam with Bosskey | Vishal, Aishwarya Arjun, Santhanam, Thaman


Sunday, July 28, 2013

கெளதம்மேனனை விடாமல் துரத்தும் த்ரிஷா!






“விண்ணைத்தாண்டி வருவாயா” படம் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன்பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட்டம் கண்டுள்ளது.

இந்த நிலையில், பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்றபோதும், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம். அதனால் மீண்டும் சூர்யாவைக்கொண்டு கெளதம்மேனன் துருவநட்சத்திரம் என்றொரு படம் எடுககிறார் என்றதும் அவரை விடாமல் பிடித்தார். ஆனால் அட்வான்ஸ் கைமாறும் நேரத்தில், சூர்யாவுக்கும், அவருக்குமிடையே கதை விசயத்தில் விவகாரம் ஏற்பட்டதால், இப்போது அப்படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், சரத்குமாரை நாயகனாக வைத்து ஒரு ஆக்சன் படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார் என்ற செய்தியும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. மீண்டும் சிம்புவை வைத்து கவுதம் ஒருபடம் இயக்க போவதாகவும் தவகல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படங்களிலாவது புகுந்து விடலாம் என்று கெளதமை விடாமல் துரத்தி வருகிறாராம் த்ரிஷா. இதுவும் அவரது சொந்த படம் என்பதால், த்ரிஷாவுக்கு அந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள்



பார்ட்னர்கள் சேர்ந்து படம் தயாரித்த காலம்மாறி இப்போது டிரேட் யூனியன்களே படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வரப்போகும் முதல் படம் முயல். தமிழ்நாடு போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் சங்கம் தன் உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
அப்படிப் பார்த்தால் இந்தப் படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள். இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் படத்தை இயக்கும் எஸ்.பி.எஸ்.குகன் உள்பட முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர்கள் அத்தனை பேருமே வீடியோகிராபர்கள், அல்லது போட்டோகிராபர்கள், யோகன், பிரபு, ராஜ்குமார் என மூன்று ஹீரோ, சரண்யா நாக், தர்ஷணா, ஆராதிகா ஆகியோர் ஹீரோயின்கள். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆர்கேவி ஸ்டூடியோவில் நடந்தது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட எல்லா ஏரியாவிலிருந்தும் போட்டோ, வீடியோ கிராபர்கள் குடும்பத்தோடு வந்து குவிந்தார்கள்.
“3 ஹீரோவும், 3 ஹீரோயினும் சேர்ந்து புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறாங்க. அந்த பிசினசுக்கு ஒரு பெரிய பிரச்னை வருது. அது மாதிரி பிரச்னை யாருக்கும் வரக்கூடாதுன்னு 6 பேரும் சேர்ந்த போராடுறதுதான் படத்தின் ஒன்லைன்” என்கிறார் இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன்.

30-ல் தனுஷ்! லண்டனில் பிறந்தநாள் கொண்டாட்டம்!!


இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசாக அவரது ‘‘துள்ளுவதோ இளமை’’ படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனது அண்ணனின் காதல்‌ கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
ஆரம்பத்தில் சுள்ளானாக இருந்து, திருடா திருடியில் மன்மத ராசா ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்த தனுஷ், பொல்லாதவர்களுக்கு பொல்லாதவனாகவும், எல்லோருக்கும் உத்தமபுத்திரனாகவும், ரஜினிக்கு மாப்பிள்ளையாகவும் மாறினார்.
சமீபத்தில் கொலவெறி பாட்டு பாடி, ஆட்டம் ஆடி உலகம் முழுக்க பிரபலமாகியும் இந்தியிலும் முத்திரை பதித்து, முதல்படத்திலேயே ரூ.100 ‌கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சேர்ந்து பெருமை சேர்த்து கடல் ராசாவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த கடல் ராசாவுக்கு இன்று(ஜூன் 28ம் தேதி) தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருடம் தனது பிறந்தநாளை இங்கு கொண்டாடவில்லை. மாறாக லண்டனில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.

ஜில்லா 3ம்கட்ட படப்பிடிப்பு துவங்கியது!






விஜய்யின் ஜில்லா படத்திற்கான மூன்றாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. நடிகர் விஜய்யும், காஜல் அகர்வாலும் இணைந்து நடித்த துப்பாக்கி படம் ஏக வசூலை அள்ளியது. அதைதொடர்ந்து, விஜய்யும், காஜலும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா.

இப்படத்தில் மேகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. விஜய்யின் தலைவா படத்தை விட அதிக எதிர்பார்பை கிளப்பிவிட்டிருக்கும் ஜில்லா படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.ஜே. நேசன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, சென்னையில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில், ஹீரோ ஹீரோயின் முதல் முதலில் சந்திக்கும் காட்சி எடுக்கப்படவுள்ளது. இதுதவிர, படத்தில் புரோட்டா சூரியை வைத்து எடுக்கப்படவுள்ள காமெடி சீன்களும் சென்னையில் ஷூட் செய்யப்படவுள்ளது என்றார்.
அடுத்த வருடம் (2014) பொங்கலில் ஜில்லா படம் வெளியாக இருக்கிறது.

தனுசுடன் மோதுகிறார் ராஜ்கிரண்!




தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதையடுத்து, வடசென்னை என்றொரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு சிம்புவை நாடினார். ஆனால், இன்றுவரை அதன் படப்பிடிப்பு தொடங்கவேயில்லை. அதனால் சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தனுஷிடமே வந்துள்ள அவர், அடுத்து வேங்கை சாமி என்றொரு படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் தனுஷ் நாயகன் என்றால் அவருடன் அதிரடியாக மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். ஹீரோவாக நடித்த பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும ராஜ்கிரணுக்கு இந்த படத்தில் வில்லன் வேடம் என்றாலும் கதைக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். அதனால்தான் தன்னை வில்லனாக மாற்றிய போதும் கேரக்டரின் தன்மையை உணர்ந்து ஓ.கே சொன்னாராம் ராஜ்கிரண்.
ஆக, வேங்கை படத்தில் தனுஷின் பாசமிக அப்பாவாக நடித்த ராஜ்கிரண், இப்போது அவருடன் பயங்கரமாக மோதும் வில்லனாக நடிக்கிறார்.

உச்சக்கட்ட சந்தோசத்தில் சமந்தா!



நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்.
தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தாவை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர அழைத்தபோது, ஏற்கனவே மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி வெளியேறிய நான், அடுத்து மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்பு என்றால் மட்டுமே வருவேன் என்று அந்த படங்களை ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் இதற்காகதான் இத்தனை நாளும் காத்திருந்தேன் என்பது போல் உடனே அப்படத்தில் கமிட்டானார் சமந்தா.
ஆனால், கெளதம்மேனனின் படத்தில் ஏற்பட்ட கதை குழப்பம் போன்று லிங்குசாமி இயக்கும் படத்தின் கதையும், சீமான் இயக்கயிருக்கும் பகலவன் படத்தில் கதை என்று சர்ச்சைகள் எழுந்ததால், அந்த படம் உடனடியாக தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியானது.
ஆனால், இப்போது அப்படத்தை ஆகஸ்ட் 21ந்தேதி அன்று கண்டிப்பாக தொடங்கயிருப்பதாக லிங்குசாமி தரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து உற்சாகமடைந்துள்ள சமந்தா, சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே அதே தேதியில் இன்னொரு தெலுங்கு படததில் நடிக்க கால்சீட் கொடுத்திருந்தபோதும் அந்த படாதிபதியிடம் பேசி சரிகட்டி, சூர்யவுடன நடிக்கும் நாளுக்காக உச்சகட்ட சந்தோசத்தில் காத்திருக்கிறாராம்.

பவர்ஸ்டாருடன் மோத பயந்த தலைவா விஜய்!



விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டு விட்டதால், அடுத்தகட்டமாக எந்தெந்த முக்கிய ஊர்களில் படம் வெளியாகிறதோ அங்கெல்லாம் பிரமாண்ட பப்ளிசிட்டிகளை முடுக்கி விட இப்போதே தலைவா டீம் வீறுகொண்டு நிற்கிறது.
இதற்கிடையே விஜய்யின் ரசிகர் பட்டாளமும் தங்கள் சார்பில் ராட்சத கட்அவுட்களை ரெடி பண்ணும் வேலைகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய தியேட்டர்களில் அடுத்த மாதம் 9-ந்தேதி தலைவா வெளியாகிறது. ஆந்திராவிலும் முக்கிய தியேட்டர்களாக தேடிவந்தனர்.
ஆனால், முக்கியமான எந்த தியேட்டரும் கிடைக்கவில்லையாம். ஏன் என்ன காரணம்? எனறு விசாரித்தபோது, ஆகஸ்ட் 7-ந்தேதி தெலுங்கு நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அத்தாரிண்டிகி தாரீதி என்ற படம் வெளியாகிறதாம். அதனால் மொத்த தியேட்டர்களையும் குத்தகை எடுத்து விட்டார்களாம்.
அவர் அங்குள்ள முன்னணி நடிகர். அதனால் அவர் படம் திரைக்கு வருகிற அதே நாளில் தலைவாவை வெளியிட்டாலும் சிக்கல்தான் என்பதால், அப்படம் ஓடி ஓரிரு வாரங்களுக்குப்பிறகு நல்ல தியேட்டர்கள் கிடைக்கிறபோது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஆந்திராவில் தலைவா ரிலீஸ் தேதியை தள்ளி

கவர்ச்சிக்கு சான்ஸ் கேட்கும் சுனைனா!



காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தபோதும் அவரது மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனால் வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி படங்களுக்குப்பிறகு சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனபோதும், அந்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காததால் இப்போதும் ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில்தான் இருக்கிறார் சுனைனா.
ஆனால், இதை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தில் பிகினி நடிகையானார். ஆனால், அந்த படமும் கவிழ்த்து விட்டது. அதனால் இப்போது ஸ்ரீகாந்துடன் நம்பியார் படத்தில் நடித்து வரும் சுனைனா, இந்த படத்தில் முதன்முறையாக காமெடி நாயகியாக நடிப்பதால், இந்த ரூட்டாவது தன்னை காப்பாற்றுமா என்று பலத்த யோசனையுடன் நடித்து வருகிறார்.
அதேசமயம் கவர்ச்சியையும் விடுவதாக இல்லையாம் அவர். கோலிவுட்டிலுள்ள சில படாதிபதிகளை அடிக்கடி சந்தித்து கிளாமர் நடிகையாகவும் உருவெடுக்கவும் தயாராகி விட்டேன். பரத்துடன் திருத்தணியில் ஆடியதை விடவும் அதிரடி குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறேன் என்றும் சொல்லி கவர்ச்சி வாய்ப்பு கேட்டு வருகிறார் சுனைனா.
காஜல்அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை விட கவர்ச்சியில் எந்தவிதத்திலும் சுனைனா சளைத்தவர் அல்ல என்று நினைத்தாலும், அவரை விடாது துரத்தும் தோல்வியை கருத்தில் கொண்டு புக் பண்ண தயங்கி நிற்கின்றனர் படாதிபதிகள்