மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்க்கையில் படம் கல்லாவில் கோடியைத் தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது.
காமெடி படங்களை எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
படம் என்னவோ தியேட்டர்களில் ஓடு, ஓடு என்று தான் ஓடுகிறது. ஆனால் விமர்சகர்கள் தான் படத்தை நார், நாராக கிழித்துக் கொண்டிருக்கின்றனர். பல படங்களில் இருந்து மசாலாவை எடுத்து அதை ஒரு குடுவையில் போட்டு குலுக்கு குலுக்கி அதையே புதிய மசாலாவாக காட்டியுள்ளார் ரோஹித் என்று விமர்சகர்கள் விளாசுகின்றனர்.
அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள், அறிவுக்கு வேலை என்பதே இல்லை என்று விமர்சகர்கள் பொறிந்து தள்ளினாலும் ரசிகர்கள் அதை காதில் வாங்குவதாகவே இல்லை. நீங்கள் உங்கள் பாட்டுக்கு கறித்துக் கொட்டுங்கள் நாங்கள் படத்தை பார்த்து கல்லாவை நிறப்புகிறோம் என்று தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.
ஷாருக்கின் முந்தைய படங்களான ரா ஒன் மற்றும் ஜப் தக் ஹை ஜான் ஆகிய பாடங்கள் எதிர்பார்த்தபடி ஓடாத நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் புல்லட் ரயில் வேகத்தில் ஓடுவது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
No comments:
Post a Comment