Tuesday, August 13, 2013

கணவருடன் ஜோடி சேருகிறார் சினேகா


அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த போது தான், பிரசன்னா – சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது என்றாலும், அதை உடனடியாக வெளிப்படுத்தாமல், பல ஆண்டுகளுக்கு பின் பகிர்ந்து கொண்டு, திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
திருமணத்துக்கு பின் வழக்கம் போல, கலைச் சேவையை தொடர்ந்துள்ள சினேகா, இப்போது , “உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில், நாயகியாக நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, கணவர் பிரசன்னாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் சினேகா. இவர்களை வைத்து, ஏற்கனவே, “அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கியவரே இந்த படத்தையும் இயக்குகிறார்.

No comments:

Post a Comment