Wednesday, August 14, 2013

சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? – போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!






சென்னை; காதலன் சிலம்பரசனுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாக நடிகை ஹன்சிகா கூறினார்.
சிம்புவும், ஹன்சிகாவும் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பின்போதே இருவருக்கும் காதல்வந்துவிட்டது. இந்த செய்தி வெளியில் வந்ததும், முதலில் மறுத்து, பின்னர் ஒப்புக் கொண்டார்கள்.
திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். சமீபத்தில் ஹன்சிகா தனது 22-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை சிம்பு அனுப்பிய கேக்கை வெட்டி கொண்டாடினார் ஹன்சிகா. ஹன்சிகா
முகத்தோடு முகம்
இந்நிலையில் சிலம்பரசனும், ஹன்சிகாவும் ஒரு பார்ட்டியில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் படங்களில் சிலம்பரசனும் ஹன்சிகாவும் இறுக்கமாக கட்டிப்பிடித்து முகத்தோடு முகம் உரசிக் கொண்டிருந்தார்கள்.
போலீசில் புகார்
இந்தப் படங்கள் குறித்து இப்போது புகார் கூற ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அவர் கூறுகையில், “இந்தப் படத்தை யார் வெளியிட்டார்கள் அது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட படங்கள். எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. இதுபற்றி நான் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன்,” என்றார்.
சிம்புவா?
இப்படித்தான் முன்பு நயன்தாராவைக் காதலித்த போதும், சிம்பு- நயன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொண்டும், நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் மீடியாவில் வெளியாகின. இவற்றை சிம்புவே வெளியிட்டதாக பேச்சு நிலவியது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment