Wednesday, July 3, 2013

பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ்


மும்பை: மகள் ஆரத்யாவை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டால், மீண்டும் பழைய படி தன் நடிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஐஸ். 

ரசிகப் பெருமக்கள் ஐஸ்வர்யா ராயின் புதுப்படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது. கர்ப்பமானதிலிருந்து புதிய படம் ஒத்துக் கொள்வதைத் தவிர்த்தார் ஐஸ்.

 இப்போது, அவரது மகள் ஆரத்யாவிற்கு இரண்டு வயதாகப் போகிறது. அடுத்ததாக அவளை பிளே ஸ்கூல் அனுப்ப திட்டமிட்டுள்ள ஐஸ், விரைவில் பழைய படி தனது திரையுலகப் பயணத்தைத் தொடரப் போகிறாராம்.

No comments:

Post a Comment