Monday, September 2, 2013

எனக்கு பயம் இல்லை: காவ்யா ஷெட்டி

கன்னடத்து நடிகையான காவ்யா ஷெட்டி, தமிழில் ‘ஷிவானி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திகில் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நடித்தது குறித்து காவ்யா ஷெட்டி கூறும்போது,
இப்படத்தில் என்னுடைய நடிப்பு திருப்தியாக இருந்தது. ‘ஷிவானி’ படத்தின் கதையை நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இயல்பாகவே நான் பயந்த பெண்தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம்தான். அந்த அச்சம் பேய், பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால்தான். பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது.
என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின்படி சினிமா உலகம் பொதுவான சமுதாய உலகைவிட பாதுகாப்பானது என்றுதான் கருதுகிறேன் என்று கூறினார். மேலும், இவருக்கு பிடித்த நடிகர் ஆர்யாதானாம்.
காவ்யா ஷெட்டி ‘ஷிவானி’ படத்தைத் தொடர்ந்து ‘அட்டக்கத்தி’ நாயகன் தினேஷுடன் இணைந்து ‘வாராயோ வெண்ணிலவே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் காதல், காமெடி, சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாகி வருகிறது.

No comments:

Post a Comment