ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.
இருவரும் வேட்டை, மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேட்டபோது ஹன்சிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகினால் எதிர்க்கமாட்டேன் என கூறி இருந்தார். இந்த செய்தியை தெலுங்கு டி.வி.சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.
இதையடுத்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–
சிம்புவுன் நானும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியாகும் செய்திகளால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். எங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்களாத்தான் பழகுகிறோம்.
இரண்டு படங்களில் சேர்ந்து நடித்ததால் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். என்னுடன் நடித்த மற்ற கதாநாயகர்களுடன் நான் எப்படி பழகுகிறோனோ. அப்படித்தான் சிம்புடனும் பழங்குகிறேன்.
சிம்புவை மணக்கப்போவதாக வெளியான செய்தியால் என்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ளமாட்டேன். அதற்கு நிறைய காலம் இருக்கிறது.
எனது திருமணம் குடும்பத்தினர் விருப்பப் படித்தான் நடக்கும். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
தமிழில் ஹன்சிகா நம்பர் ஒன் நடிகையாகி உள்ளார். நிறைய படங்கள் குவிகிறது. சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள் ஹிட்டாகியுள்ளன.
No comments:
Post a Comment