சரத்குமார் – நமீதா நடித்து சூப்பர் ஹிட்டான ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.
இந்தக் கதையில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமீதாவின் கவர்ச்சி ப்ளஸ் காமெடி, வடிவேலுவின் வெடிச் சிரிப்பு மற்றும் சரத்குமாரின் ஆக்ஷன் போன்றவற்றால் இன்றும் பார்க்கப் பார்க்க திகட்டாத பொழுதுபோக்குப் படமாகத் திகழ்கிறது ஏய்.
சிங்கம் 2 படத்தின் வெற்றி, இப்போது ஏய் படத்துக்கும் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் தூண்டியுள்ளது. அதற்கான பக்கா ஸ்க்ரிப்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.
இந்தப் படத்தில் சரத்குமாரை நான்கு வேடங்களில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கடேஷ் முயற்சித்து வருகிறார்.
நமீதா, வடிவேலு ஆகியோரையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பது உண்மையா என இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ‘அதற்குத்தான் முயற்சி செய்து வருகிறோம். அவர் தேதிகளைப் பொறுத்துதான் எல்லாமே,” என்றார்
No comments:
Post a Comment