சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சத்யராஜும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசும் போது சிவகார்த்திகேயனுக்கு நிறைய திறமைகள் இருப்பதை அறிந்தேன். எனவே தான் ‘எதிர் நீச்சல்’ படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன். சிவகார்த்திகேயன் எனது தம்பி மாதிரி. அவர் மேன்மேலும் வளர வேண்டும் என்றார்.
டைரக்டர் பாண்டிராஜ் பேசியதாவது:-
திரையுலகில் டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நிறைய ஜோசியகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தை ஆரம்பிக்கும் முன்பே இது விளங்காது, தேறாது என்று ஜோசியம் சொல்லி விடுகிறார்கள்.
சிவகார்த்திகேயனை வைத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தை எடுத்தேன். டி.வி.காரர்களை வைத்து படம் எடுத்தால் உருப்படாது என்றனர். படத்தை ஒருவர் பார்த்து விட்டு தயாரிப்பாளர் மதனை பயமுறுத்தினார். படம் ஓடவே ஓடாது என்றார். படம் தோற்றால் நான் ஏ.வி.எம்மில் செக்யூரிட்டி வேலைக்கு போய் விடுவேன். சிவகார்த்திகேயன் டி.விக்கு போய்விடுவார். தயாரிப்பாளர் மதன் எங்கே போவார் என்று கவலைப்பட்டேன். ஆனால் படம் நன்றாக ஓடி கோடி, கோடியாய் கொட்டியது.
இப்படம் ஓடாது என்றவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க அவரிடம் கால்ஷீட் கேட்டு அலைகிறார். இப்போது எனது அடுத்த படத்துக்கும் இதே வதந்தியை பரப்புகிறார்கள். அதையும் மீறி படம் ஓடும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிவகார்த்திகேயன், விமல், சூரி, சத்யராஜ், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு சாலமன், செந்தில் குமார் தயாரிப்பாளர் எஸ்.மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment