சமீபகாலமாக கதை பிரச்னையை விட டைட்டீல் பிரச்னைதான் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தின் பூஜை போடும்போதே அதன் டைட்டீலை அறிவித்து விடுவார்கள். ஆனால் இப்போது பல படங்களுக்கு என்ன தலைப்பு என்பதே தெரியவில்லை.
குறிப்பாக, தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 53வது படத்துக்கு இப்போது வரை என்ன தலைப்பு என்பது தெரியாத நிலையில்தான் உள்ளது. ரிலீஸ் ஆவதற்குள்ளாவது அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்போம்.
இந்த நிலையில், எதற்கு புதுசா யோசிச்சு கஷ்டப்பட்டுக்கிட்டு என்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு படத்துக்கு, வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடித்த வடிவேலு நடத்திய “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்பதையே டைட்டீலாக்கியுள்ளனர்.
அதையடுத்து இப்போது, அவரது இன்னொரு படத்துக்கு “கரகாட்டக்காரன்” படத்தில் ஒரு ஓட்டக்காரை தள்ளிக்கொண்டு திரிவார்களே அந்த காரை யாருடையது என்று ஒருவர் கேட்க, அதற்கு கவுண்டமணி…. நடிகை சொப்பன சுந்தரியோட கார் என்பார்.
அப்போது, செந்தில் அவரது காதுக்குள் சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம். இப்ப அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கான்னு கேட்பாரு. அதற்கு செந்திலை பளார் என ஒரு அறை விட்டபடி, யாரு யார வச்சிருக்கானு தெரிஞ்சிக்கிறதா என் வேலை என்பார்.
அப்படி பிரபலமாக பேசப்பட்ட அந்த “சொப்பன சுந்தரி” என்ற பெயரையே இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும இன்னொரு படத்துக்கும் வைத்திருக்கிறார். ஆக, கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடியன் படம் இருக்கிறவரை நம்மூர் ஹீரோக்களின் படங்களுக்கு டைட்டீல் பிரச்னையே இருக்காது என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment