விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்குமான பனிப்போர் இன்னும் தீரவில்லையாம்.
இருவருமே நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் அதிருப்திகளை வெளியில் கொட்டிவிடுகிறார்களாம். சமீபத்தில் நடந்த தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பாதியில் கிளம்பிவிட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 3 அன்று, விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தன் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
செலக்டிவ்வாக கொஞ்சம் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்திருந்தனர். “என்ன சார்… கூட்டம் குறைவா இருக்கு. விஜய் ரசிகர்களுக்கு அழைப்பு இல்லையா?” என்று ஒரு நிருபர் கேட்க, ”பிறந்த நாள்னாலே சிலருக்குப் பிடிக்க மாட்டேங்குதே… எதுக்கு கூப்பிட்டு கஷ்டப்படுத்தணும்” என்றார்.
இந்த முறை விஜய் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அதற்காக செய்யப்பட்டிருந்த அத்தனை ஏற்பாடுகளும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு, ஜில்லா ஷூட்டிங்கில் உடன் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி பரிமாறி பிறந்த நாளை சுருக்கமாக விஜய் கொண்டாடியது நினைவிருக்கலாம்!
No comments:
Post a Comment