Monday, July 15, 2013

செல்வராகவனின் புதிய படம், ஹீரோ ராணா




இரண்டாம் உலகம் படத்துக்கு முன்னால் செல்வராகவன் இரண்டு படங்களைத் தொடங்கி இரண்டும் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. விக்ரம் நடித்த படம் ஒன்று. ஒரு வாரம் படப்பிடிப்புகூட நடத்தினார்கள். இன்னொன்று ராணா நடிப்பில் தொடங்கப்பட்டது. இந்தப் படம் படப்பிடிப்புக்கு போகாமலே கலைந்து போனது.
ராணா நடிப்பில் தொடங்குவதாக இருந்த படத்தை செல்வராகவன் முற்றிலுமாக கைவிடவில்லை. இரண்டாம் உலகத்துக்குப் பிறகு அந்தப் படத்தைதான் இயக்குகிறார். ராணா ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் படம் தயாராகிறது.
ராணா கைவசம் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. குணசேக‌ரின் ருத்ரம்மாதேவி, ராஜமௌலியின் பாகுபலி. இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் கால்ஷீட் தந்திருப்பது செல்வராகவனின் படத்துக்கு.
ஹீரோயின், இசையமைப்பாளர், படத்தின் பெயர் போன்றவை இன்னும் முடிவாகவில்லை.

No comments:

Post a Comment