முத்தியாரா பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் எம்.ஆனிமுத்து தயாரிக்கும் புதிய படம் ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’. இதில் மைனா படத்தில் நடித்த விதார்த் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு நாயகியாக வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த மனிஷா நடிக்கிறார். மேலும், சூரி, இளவரசு, கோவை சரளா, இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, சங்கிலி முருகன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தை ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘அழகர் மலை’, ‘சுறா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் பாடல்கள், கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அருள் தேவ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பழனி, பொள்ளாச்சி, வால்பாறை, சாலக்குடி, மூணாறு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகிறோம். இப்படத்தில் வேல்ப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் விதார்த்தும், முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர். தனியார் பேருந்தின் டிரைவராக விதார்த்தும், கண்டக்டராக சூரியும் வருகின்றனர். இவர்கள் செய்யும் கலாட்டாவை காதலுடன் கலந்து படமாக்கியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment