நடிகை குஷ்பு படங்களில் தற்போது நடிக்கவில்லை. ‘கலகலப்பு’ என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.வில் முன்னணி பேச்சாளராக இருந்து கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அவரது பேட்டியொன்று சர்ச்சையை கிளப்பிவிட்டது.
இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என செய்தி வெளியானது. பிறகு இதற்கு மறுப்பும் வந்தது.
ஆனாலும் குஷ்புவிடம் இது குறித்து அடிக்கடி பலர் விசாரிப்பதால் கோபமடைந்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறும் போது, ‘என்னைப் பற்றி வந்த செய்தி வதந்தி என தெரிந்தும் அதனை நான் மறுக்க வேண்டும் என்று போன் மூலம் என்னிடம் வற்புறுத்துகின்றனர். இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கவில்லை. இது ஜனநாயகநாடு. சிந்திக்கவும், தங்கள் விருப்பப்படி கருத்துக்களை கூறவும் மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே இந்த வதந்தி குறித்து விளக்கம் கேட்டு என்னிடம் யாரும் வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நான் ‘பிசி’யாக இருக்கிறேன்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment