Wednesday, July 17, 2013

‘திருமணம் நிச்சயம்.. அதுவும் குருவாயூர் கோயில்லதான்.. ஆனா இப்போ இல்ல!’






எனக்கு திருமணம் நடப்பது நிச்சயமான ஒன்றுதான். அதுவும் நான் விரும்பும் குருவாயூர் கோயிலில்தான் நடக்க வேண்டும் என விரும்புகிறேன், என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாவனாவுக்கு குருவாயூர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது தவறான செய்தி என்று அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
“எனக்கு திருமணம் நடக்கப் போவது உண்மைதான். அதுவும் எனக்குப் பிடித்த குருவாயூர் கோயிலில் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் இப்போதல்ல. இன்னும் ஓராண்டு கழித்துதான் திருமணம் செய்வேன். மாப்பிள்ளை யார் என்றெல்லாம் இப்போது கூற முடியாது,” என்றார்.
பாவனா தமிழில் நடித்த கடைசி படம் அஜீத்தின் அசல். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லை. கன்னடம், மலையாளத்தில் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment