Friday, July 19, 2013

கார் விபத்தில் ஒருவர் பலியான வழக்கு: சல்மான்கான் கோர்ட்டில் சரண்





கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகர் சர்மான்கான் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

கடந்த 2002–ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மும்பையில் அதி வேகமாக கார் ஓட்டியபோது 5 பேர் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார். மற்றவர்கள் காயத்துடன் தப்பினார்கள்.
இது தொடர்பாக சல்மான்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று சல்மான்கான் கோர்ட்டில் ஆஜர் ஆக உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அவர் காரில் கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் 2 சகோதரிகளும் வந்தனர்.
வழக்கை வருகிற 24–ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்று அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
சல்மான்கான் கார் ஓட்டிய போது குடிபோதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
ஏற்கனவே ராஜஸ்தானில் சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் 3 நாட்கள் ஜெயிலில் இருந்த பின்பு ஜாமீனில் விடுதலையானார்

No comments:

Post a Comment