டைரக்டர் களஞ்சியம் மிரட்டுவதாக நடிகை அஞ்சலி புகார் கூறி இருந்தார். இதையடுத்து அஞ்சலி மீது களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நேரில் ஆஜராகும்படி அஞ்சலிக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சம்மனை அஞ்சலி வாங்கவில்லை. கோர்ட்டுக்கு திரும்ப வந்து விட்டது.
இதையடுத்து அடுத்த மாதம் 12–ந்தேதி கோர்ட்டில் ஆஜராக அஞ்சலிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment