அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தேக்கடி என்ற புதுப்படத்தை தயாரிக்கிறது.
திருக்குமரன் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீனுடன் இணைந்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லாவை தயாரித்து வருகிறது. அத்துடன் புதிய படம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. நாளைய இயக்குனர் சீசன் 2 வில் முதலிடம் பிடித்த ரமேஷ் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
சூது கவ்வும் படத்தில் மூன்று நண்பர்களில் ஐடி துறையைச் சேர்ந்தவராக வரும் அசோக் செல்வன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் ஜனனி அய்யர்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் இசையமைக்கிறார். பீட்சாவைப் போலவே இதுவும் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.
No comments:
Post a Comment