கடந்த சில தினங்களாக ரஜினி கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும், இல்லையில்லை ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இரண்டையுமே ரஜினி தரப்பிலோ சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் தரப்பிலோ ஒருவரும் உறுதிப்படுத்தவில்லை.
சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழ், கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, முன்னணி ஆங்கில நாளிதள் ஒன்று தன் பங்குக்கு இன்னொரு பரபரப்பைக் கொளுத்திப் போட்டது.
இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த
இரண்டு செய்திகளுமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா?
ரஜினி தரப்பில் விசாரித்தால், 'அவரையும் அவர் படங்களையும் பற்றி தினமும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒருவரும் குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முயற்சிப்பதில்லை. இந்த பரபரப்பு எப்படி கிளம்பியதோ அப்படியே மறந்தும்போகும். அதனால்தான் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்வதில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக ரஜினி சாரே தருவார்," என்கிறார்கள்.
ஆனால் இரண்டையுமே ரஜினி தரப்பிலோ சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் தரப்பிலோ ஒருவரும் உறுதிப்படுத்தவில்லை.
சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழ், கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, முன்னணி ஆங்கில நாளிதள் ஒன்று தன் பங்குக்கு இன்னொரு பரபரப்பைக் கொளுத்திப் போட்டது.
இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த
இரண்டு செய்திகளுமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா?
ரஜினி தரப்பில் விசாரித்தால், 'அவரையும் அவர் படங்களையும் பற்றி தினமும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒருவரும் குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முயற்சிப்பதில்லை. இந்த பரபரப்பு எப்படி கிளம்பியதோ அப்படியே மறந்தும்போகும். அதனால்தான் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்வதில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக ரஜினி சாரே தருவார்," என்கிறார்கள்.
No comments:
Post a Comment