Tuesday, June 18, 2013

ஜெய்ஹிந்த் 2 – அர்ஜுன் செய்த மாற்றம்

தமிழில் பார்ட் 2 எடுப்பது அதிகரித்திருக்கிறது. சிங்கம் 2, விஸ்வரூபம் 2 வுக்குப் பிறகு இப்போது ஜெய்ஹிந்த் 2. இந்த இரண்டாம் பாகத்தை அறிவித்து படப்பிடிப்பையும் அர்ஜுன் தொடங்கிவிட்டார்.
பார்ட் 2 என பெயரிட்டாலும் ஜெய்ஹிந்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் கதைரீதியாக மட்டுமின்றி கதாபாத்திர ரீதியாகவும் எந்தத் தொடர்பும் இல்லையாம். அனைத்தும் புத்தம் புதுசு. முதல் பாகத்தில் அர்ஜுன் ஜோடி ரஞ்சிதா. இப்போது ரஞ்சிதாவை போட முடியுமா? சுர்வீனை நாயகியாக்கியிருக்கிறார்.
அதேபோல் முதல் பாகத்தில் காமெடி ஏரியாவை கவனித்தவர் கவுண்டமணி. அவரின் பகல்தூக்க காமெடி இன்றும் பிரபலம். கவுண்டமணியின் மார்க்கெட் ஒரேயடியாக சாய்ந்துவிட்டதால் அவருக்குப் பதில் பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார். பிரம்மானந்தம் என்றால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் கவராகும் என்பதால் இந்த ஏற்பாடு

No comments:

Post a Comment