Friday, June 21, 2013

நேரமே சரியில்லை: மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்ட வடிவேலு

சென்னை: ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததால் வடிவேலு மதுரைக்கே சென்றுவிட்டாராம். அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி 2 ஆண்டுகளாக மதுரையில் இருந்தார். இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் ஷூட்டிங்கில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம். அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்த வடிவேலு அப்செட்டாகி மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

No comments:

Post a Comment