Sunday, June 16, 2013

ரஜினிகாந்த் மருமகனாக இருப்பதால் புண்ணியமில்லை: தனுஷ்


மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக இருப்பது தனக்கு உதவியும் இல்லை, உபத்திரமும் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் தனது முதல் இந்தி படமான ராஞ்ஹனா குறித்தும், ரஜினி குறித்தும் கூறுகையில், சூப்பர் ஸ்டாரின் மருமகனாக இருப்பதால் எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் எனது வேலையை செய்து வருகிறேன். ரஜினியின் மருமகன் என்பது எனக்கு எந்த உதவியும் இல்லை, அது என்னை பாதிக்கவும் இல்லை. நான் நடிக்கும் முறை அவருடையது போன்று இல்லை. அதனால் ஒப்பிட வேண்டியதில்லை. 20 முதல் 25 படங்களில் நடித்த ஒருவரை ஒரு பெரிய நடிகருடன் ஒப்பிடுவது சரி அல்ல. என்னுடைய முதல் இந்தி படமான ராஞ்ஹனா பற்றி அவரிடம்(ரஜினி) பேசியதில்லை. நான் எப்படி என் வேலையில் பிசியாக உள்ளேனோ அதே போன்று அவரும் அவருடைய வேலையில் பிசியாக உள்ளார். அதனால் இந்த படம் குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை. ஐஸ்வர்யா இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நான் ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றார்.

No comments:

Post a Comment