தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். ‘நேருக்கு நேர்’, ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘பம்மல் கே.சம்பந்தம்’ உள்பட பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
2003-ல் தீபக் பக்கா என்பவரை மணந்தார். தற்போது அவருக்கு அதீப், ஆதித் என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கதாநாயகியாக யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஐந்தாம்படை’ படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்தார். தற்போது சூர்யாவுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அக்காள் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது.
அம்மா வேடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் சிம்ரன் மறுத்து விட்டார். இப்போது அந்த பிடிவாதம் தளர்ந்துள்ளது. இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment