சென்னை: அஜீத் குமார் என்ற புதுமுக நடிகர் மீது நம்பிக்கை வைத்து அவரை அமராவதி படத்தில் எடுக்குமாறு இயக்குனர் செல்வாவுக்கு பரிந்துரை செய்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அஜீத் குமார் என்ற நடிகரை திரையுலகிற்கு அடையாளம் காட்டிய படம் அமராவதி. ஒல்லியான உருவம், அரும்பு மீசை வைத்திருந்த அஜீத் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமான படம் அமராவதி. அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்கிய செல்வா கூறுகையில்,
நான் அஜீத்தை முதன்முதலில் பார்த்ததுமே தமிழ் சினிமாவின் அழகிய ஹீரோவாக இவர் வருவார் என்று நினைத்தேன். அமராவதி படத்திற்கு அவரை எனக்கு பரிந்துரை செய்ததே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான். அஜீத்தை வைத்து கிரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கவிருந்தேன். ஆனாால் அது முடியாமல் போனது.
எனது படங்களில் புதுமுகங்கள் தேவைப்படுவதால் மீண்டும் அஜீத்துடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்றார்.
No comments:
Post a Comment