Wednesday, July 24, 2013

நல்லவன்… வல்லவன்… வேற மாதி‌ரியானவன்





எங்கேயும் எப்போதும் என்ற மென்மையான படத்தை தந்த சரவணனின் அடுத்தப் படம் இவன் வேற மாதி‌ரி. நெகடிவாக தெ‌ரியும் பெயராக தெ‌ரிந்தாலும், பாஸிடிவான கேரக்டர் படத்தின் நாயகன் விக்ரம் பிரபுக்கு.

படத்தின் ஒன் லைன் ரொம்ப சிம்பிள். பல எம்.‌ஜி.ஆர், ர‌ஜினி படங்களில் வந்ததுதான். அநியாயங்களைப் பார்க்கும் போது, இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என கற்பனையாக அதனை யோசித்து கடந்துவிடுவோம். இவன் வேற மாதி‌ரி, கற்பனை செய்யாமல் களத்தில் இறங்குகிறவன்.
ஆக்சனுக்கு முக்கியத்துவம் தந்து சரவணன் படத்தை எடுத்திருக்கிறார். சுரபி படத்தின் நாயகி. தமிழ் என்பதையே ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கும் அளவுக்கு தமிழ் ஞானம் கொண்டவர். ஒரு மாதம் டியூசன் எடுத்த பிறகுதான் கேமரா முன் நிற்க வைத்தார்களாம். பைனல் இயர் என்‌ஜினிய‌ரிங் ஸ்டூடண்டாக நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர போலீஸ் அதிகா‌ரியாக கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமாகிறவர் வம்சி கிருஷ்ணா. இவர் கன்னட நடிகர். சாதாரண வில்லனாக இல்லாமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும்விதத்தில் இருக்குமா‌ம் இவ‌ரின் வில்லன் கதாபாத்திரம்.
படத்தின் கதையை ஒரே வ‌ரியில் சொல்வதென்றால்… நல்லவன், வல்லவன், வேற மாதி‌ரியானவன்.

No comments:

Post a Comment