Monday, June 24, 2013

தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா?

மும்பை: தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர். 

   தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா இந்தி படம் கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 



            என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட் இளம் ஹீரோக்கள், வயதாகியும் ஹீரோவாகவே தொடரும் ஹீரோக்கள் என அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக உள்ளனர். அப்படிபட்டவர்களுக்கு மத்தியில் ஆமீர் கான், ரன்பிர் கபூர், ஷாருக் மாதிரி சிலர் தான் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று கூறலாம்.



 இப்படி நடிப்பை விட்டு பாடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆள் பார்க்க சுள்ளானாக இருந்தாலும் நடிப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் தான் பாலிவுட்டும், வட இந்திய மீடியாக்களும் அவரை கொண்டாடுகிறது. படத்தின் நாயகி சோனம் கபூர் பற்றி ஒருத்தர் கூட பேச மாட்டேன் என்கிறார்கள்.


          இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ராஞ்ஹனா படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment