Wednesday, June 26, 2013

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை சினிமாவாகிறது

கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நினைவாகப்போகிறது என்று கூறுகிறார்.
இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராவின் வாழ்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அநேகமாக தலைப்பும் ‘அயர்ன் லேடி இந்திராகாந்தி’ என்று இருக்கலாம். படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக நான் நினைப்பது ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவைத்தான். காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும் என்கிறார் இயக்குனர் நட்டிகுமார்.

No comments:

Post a Comment